Thursday 12 January 2017

குரு பார்வை கோடி நன்மை

''குரு பிரம்மா குரு விஷ்ணுகுரு தேவோ மகேஸ்வரஹகுரு சாக்ஷõத் பரப்பிரம்மாதஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''
ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான். கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான். சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான். அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான். குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன. சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தனர்.தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது. தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க, குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது. திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி, மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது. குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது. சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான். தன் கணக்கு சரியாகவே இருந்ததுபோலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது? குழந்தை எப்படிப் பிழைத்தது? - தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது. புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார் ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்?சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றான். ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்தபோதும், கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை உணர முடியும். குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள். 

குரு எந்த வீட்டில் அமர்ந்தால் எத்­த­கைய நன்மை கிடைக்கும்?...
குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயு­ளுடன் இருப்­பார்கள். சிறந்த மனைவி அமையும். இவ­ருடன் தொடர்பு வைத்­தி­ருப்­ப­வர்கள் நல்ல ஆன்­மி­க­வா­தி­க­ளாக இருப்­பார்கள். குழந்தை பாக்­கியம் கிடைக்கும். பூர்வ புண்­ணிய பாக்­கியம் கிடைக்கும். இவர்­களின் குழந்­தைகள் சிறந்து விளங்­கு­வார்கள். வாழ்க்­கையில் இவர் நல்ல முன்­னேற்றம் காண்­பார். தந்தை இவ­ருக்கு உதவி புரிவார்.
குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்­சா­ளர்­க­ளாக இருப்­பார்கள். இவர்­களின் வாக்­குக்கு சமு­தா­யத்தில் மதிப்பு இருக்கும். கல்­வியில் சிறந்து விளங்­கு­வார்கள். குடும்­பத்தில் நிம்­மதி இருக்கும். குழந்தை பாக்­கியம் கிடைக்கும். கையி­ருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியா­பா­ரத்தில் சிறந்து விளங்­கு­வார்கள். இவ­ருடன் சேரும் வியா­பார நண்­பர்­களும் நல்ல முறையில் இருப்­பார்கள்.
குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்­தியில் ஈடு­பாடு இருக்கும் இளைய சகோ­தரருக்­கு நல்ல முன்­னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவ­ருக்கு நன்மை கிடைக்கும். எதிர்­பா­லி­ன­ரிடம் மோகம் இருக்கும். அள­வோ­டுதான் மகிழ்ச்சி இருக்கும்.
குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்­துடன் இருப்பார். குழந்தை பாக்­கியம் தாம­த­மாக இருக்கும். குழந்­தைகள் மூலம் நல்ல விஷ­யங்கள் நடக்­காது. பகை­வர்களை உண்­டா­கு­வார்கள். விவ­சாய சம்­பந்­த­பட்ட குடும்­ப­மாக இருந்தால் விவ­சாயம் மூலம் நல்ல வரு­மானம் இருக்கும்.
குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்­தி­ர­பாக்­கியம் கிடைக்கும். புத்­தி­ரர்­களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்­ணிய அறிவு இருக்கும். குல­தெய்­வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பண­வ­ர­வுகள் இருக்கும்.
குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகை­வரை வெற்றி கொள்­ளலாம். சமு­தா­யத்தில் மதிப்பு இருக்­காது. குழந்தை பாக்­கியத்தில் தடையை ஏற்­ப­டுத்­துவார். மங்­க­ள­க­ர­மான நிகழ்ச்­சிகள் நடை­பெற தாமதமாகும். உடம்பு பலம் இழந்து காணப்­படும்.
குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்­கி­னத்தை பார்ப்­பதால் உடல் நிலை நன்­றாக இருக்கும். சமு­தா­யத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனை­வி­யாக வரு­பவர் ஆன்­மிக சம்­பந்­தப்­பட்ட குடும்­ப­மாக இருக்கும். மனை­வியும் ஆன்­மிக விஷ­யங்­களில் நாட்டம் உள்­ள­வ­ராக இருப்பார். இவர்­க­ளிடம் தொடர்பு வைத்தி­ருப்­ப­வர்கள் நல்ல மத­கு­ரு­மார்­க­ளாக இருக்க வாய்ப்பு உண்டு.
குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமை­வது கஷ்­ட­மாக இருக்கும். திரு­மணம் முடிந்தால் மனை­வியின் உடல்­நிலை பாதிக்­கப்­படும். செல்வ நிலை இருக்கும். சோதி­டத்­து­றையில் நல்ல அறிவு ஏற்­படும். மரண வீட்டை குறிப்­பதால் உயிர் வதை இல்­லாமல் உடனே போகும்.
குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்­கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பத­வியில் இருப்பார். ஆன்­மி­கத்தில் சிறந்து விளங்­குவார். மிகப்­பெ­ரிய மடா­தி­ப­தி­களின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்­புகள் எல்லாம் படிப்­பார்கள். வெளி­நா­டுகள் செல்ல வைப்பார். வெளி­நாட்டு தொடர்பு மூலம் பண­வ­ர­வுகள் இருக்கும். குல­தெய்வ அருள் இருக்கும். மந்­திர வித்தை நன்­றாக இருக்கும்.
குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அர­சாங்­கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்­றிய வட்­டா­ரங்­களில் மதிப்பு இருக்கும். வரு­மா­னத்தை பெருக்­குவார். கோவில் சம்­பந்­தப்­பட்ட இடங்­களில் வேலைக்கு அமர்த்­துவார்.
குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வரு­மானம் இருக்கும். மூத்த சகோ­தர சகோ­த­ரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்­பர்கள் அமை­வார்கள். வாகன வச­திகள் ஏற்­படும். எந்த வேலையை எடுத்­தாலும் வரு­மா­னத்­திற்கு குறைவு இருக்­காது. குழந்தை பாக்­கியம் இருக்கும்.
குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுக்­கத்தை கடை­பி­டிக்க மாட்டார். புண்­ணிய இடங்­க­ளுக்கு அடிக்­கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்­கி­யத்தில் குறை இருக்கும். சில பேர் பக்­தி­மான்கள் போல் நடிப்­பார்கள். கோவில் கட்­டுதல், ஆறு குளம் வெட்­டுதல் போன்­ற­வற்றில் ஈடு­பட வைப்பார். பண­ வி­ரையம் ஏற்­படும்.
குரு பக­வானால் ஞாப­க­ம­றதி, காது­களில் பாதிப்பு, குடல் புண், பூச்­சி­களால் பாதிப்பு, பிரா­ம­ணர்கள் மற்றும் பெரி­யோர்­களின் சாபத்தால் உடல் பாதிப்பு, கோவில் விவ­கா­ரங்­களில் ஈடு­ப­டு­வதால் உடல்­நிலை பாதிப்பு, வறு­மையால் உடல்­நிலை பாதிப்பு போன்­றவை உண்­டாகும்.
ஒருவர் நல்­ல­வரா ? கெட்­ட­வரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும். ஒரு­வ­ருக்கு எந்த அளவு அதிர்ஷ்­டத்தை வழங்­கலாம் என்று நிர்­ண­யிப்­பவர். வியா­ழக்­கி­ழமை விரதம் கடை­பி­டித்தால், குரு பக­வானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம்.
குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் கடைபிடிக்க வேண்டும். வெண் முல்லை மலர் சாற்றி குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.
"குருவே சரணம்"

No comments:

Post a Comment